இப்பாடத்திட்டம் கற்றல்முறைகளான கவனித்தல், இடைவினை, பங்கேற்பு, சுய முன்முயற்சிகள், சுய செறிவு, அனுபவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையினிடமிருந்து இயல்பாக கற்றல் போன்ற பாடநெறிமுறை யோசனையிலிருந்து உருவானதாகும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு கூட்டு கற்றல் அமர்வாக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்த அமர்வு முழுவதும் ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களின் கற்றல் குறித்த பிரதிபலிப்பு எங்கள் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் ஒவ்வொரு மாணவரும் தங்கள் பங்கேற்பாளர்களுடன் தங்கள் பார்வையை வெளிப்படுத்த தூண்டப்படுவார்கள், இது அவர்களின் கற்றலில் கவனம் செலுத்த உதவுகிறது, மேலும் பொதுத்தளத்தில் பேச்சாற்றலை வளர்க்க உந்துதலாக உள்ளது. ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் மனமகிழ் விளையாட்டுகள் மற்றும் எளிய வினாடி வினா போன்றவைகள் உள்ளடங்கும்.
குழந்தைகள் நிலையான நற்குணங்களை கற்றுக்கொள்வார்கள், அவையே வாழ்க்கைக்கு அடித்தளம் மற்றும் மூலதனம் என்று உறுதியாக நம்புவார்கள், அவற்றைக்கொண்டு கண்ணியமான வாழ்வை நோக்கி முன்னேறிச்செல்வார்கள்.
உயர்வான சிந்தனைகளுக்கு உயிர் கொடுப்போம்!
தூண்டுதல் மற்றும் எளிதாக்கம் மூலம் கற்றல் நிகழும் இடம்!
அவ்வை அறநெறி பாடசாலை . All rights reserved | Design by Micron Systems
Duis venenatis, turpis eu bibendum porttitor, sapien quam ultricies tellus, ac rhoncus risus odio eget nunc. Pellentesque ac fermentum diam. Integer eu facilisis nunc, a iaculis felis. Pellentesque pellentesque tempor enim, in dapibus turpis porttitor quis. Suspendisse ultrices hendrerit massa. Nam id metus id tellus ultrices ullamcorper. Cras tempor massa luctus, varius lacus sit amet, blandit lorem. Duis auctor in tortor sed tristique. Proin sed finibus sem