குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதில் நேர்மையான, நியாயமான மற்றும் முற்போக்கான சிந்தனை செயல்முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவ்வை அறநெறி பாடசாலை தொடங்கப்பட்டது. எந்தவொரு சூழ்நிலையையும் நெகிழ்திறனுடனும் இரக்கத்துடனும் எதிர்கொள்ள இளைய தலைமுறையினரை சித்தப்படுத்துவதும், சக மனிதர்களிடமும் சுற்றுச்சூழலினதும் ஒரு வலுவான நனவுணர்வை வளர்ப்பதே எங்கள் நோக்கம். அர்த்தமுள்ள மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கான எங்களின் ஆர்வம் எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது, யாம் கற்றுக்கொண்டவற்றை இந்த பயணத்தில் பரப்புவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
எதிர்கால தலைமுறையினரை தன்னிறைவு பெறச் செய்வதற்கும், அனைத்து வளங்களையும் திறம்பட மற்றும் பொறுப்புடன் பயன்படுத்த அவர்களைச் சித்தப்படுத்துவதற்கும் உதவுதல். உயர்ந்த அறநெறிமுறைகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்க முனைதல்.
அறம் சார்ந்த இயற்கை வழி வாழ்வியலை அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் அறிமுகப்படுத்த ஒரு முன்முயற்சி எடுப்போம்.